திருச்சி மாவட்டம், துறையூரில் விதிமுறைகளுக்கு மீறி திருச்சி சாலையில் விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் அன்பழகன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்திருந்தார், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ் தலைமையிலான அமர்வு அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்படி, விடுதி மூன்று மற்றும் நான்காம் தளத்தில் உள்ள அறைகளை துறையூர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் துறையூர் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன. துறையூர் பகுதிகளில் இதுபோல விதிமுறைகளை மீறி பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், அதன்மீதும் நகராட்சி நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.