திருச்சி, வயலூர் ரோடு வாசன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர், எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கடை வைத்துள்ளார். வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றிருந்தார். இந்நிலையில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவையும் உடைத்து அதிலிருந்த 17 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடி கொண்டு தப்பி ஓடிவிட்டனர். வியாபாரம் முடிந்து வீடு திரும்பிய பிரகாஷ், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணம், நகைகள் திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசில் அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.