அமைச்சர் கே.என்.நேருவை காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்தித்து மனு…!
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் அனைத்து நிர்வாகிகள் அமைச்சர் கே.என். நேருவை இன்று( மே 7) சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், நாளை மறுநாள்
(மே 9) திருச்சி பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்புவிழா மற்றும் அறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம் திறப்புவிழா ஆகியவற்றுக்கு வருகை தரும் முதல்வரை, காந்திமார்க்கெட் வியாபாரிகளின் கூட்டமைப்பு சார்பாக அன்போடு வரவேற்கிறோம்.
அதேநாளில் (9-ந் தேதி) பஞ்சப்பூர் பசுமை பூங்காவில், புதிதாக அமையவுள்ள பெரியார் ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாகத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வது என்னவென்றால், திருச்சி காந்தி மார்க்கெட்டில் 25 வியாபார சங்கங்கள் ஒன்றிணைந்து உருவாகியுள்ள எங்களது வியாபார கூட்டமைப்பின் நிர்வாகிகளையும் கலந்து ஆலோசித்து, சுமார் 2300 மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்றவாறு நல்ல விசாலமான வசதிகளுடன் கூடிய கடைகள் அமைத்து தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்றி தருவோம் என அமைச்சர் கே.என்.நேரு உறுதிபட தெரிவித்தார். அப்போது அமைச்சர் வியாபாரிகளிடம் கூறுகையில், திருச்சி காந்தி மார்க்கெட் தொடர்ந்து இங்கேயே செயல்படும். பஞ்சப்பூர் புதிய காய்கறி மார்க்கெட் கள்ளிக்குடி மார்க்கெட் போல் அமைந்து விடாது. 9-ந்தேதி புதிய மார்க்கெட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய பிறகு உங்களை கலந்து ஆலோசித்த பிறகு தான் புதிய மார்க்கெட்டில் கடைகள் அமைக்கப்படும் என தெரிவித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த வியாபாரிகள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Comments are closed.