தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ்- 2 பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று( மே 8) வெளியிட்டார். பிளஸ்- 2 பொதுத் தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் மே 9 ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், ஒரு நாள் முன்னதாக இன்று வெளியிடப்பட்டது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். தேர்வு முடிவு வெளியானதில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். மாணவ, மாணவிகள் https://inresults.nic.in/https://results.digilocker.gov.in/rm இணையதள முகவரிகளில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொண்டனர். வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர். 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 மாணவர்களும், 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Comments are closed.