Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் மார்ச் 29-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்- * பொதுமக்கள் பங்கேற்க மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் அழைப்பு!

திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் தேர்வு செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணிகள் போன்றவை இறுதி செய்து கிராம சபையில் தீர்மானமாக வைப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் வருகிற 29.03.2025 அன்று திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகின்றன. கிராம ஊராட்சியில் பனிப்பாறை பாதுகாப்பு என்கின்ற சிறப்பு கருப்பொருள், அனைவருக்கும் குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்ற இலக்கினை அடைதல், கிராம ஊராட்சியில் ( 1.04.2024 முதல் 28.02.2025 )முடிய உள்ள கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை உறுதி செய்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்படும். காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்