Rock Fort Times
Online News

லால்குடி அருகே 108 ஆம்புலன்ஸ் டிரைவர், டெக்னீசியனை தாக்கிய வாலிபர் கைது…!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள காட்டூர் கொத்தமங்கலத்தை சேர்ந்த கௌசல்யா என்பவர் பிரசவத்திற்காக, சிறுமயங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அவரது உறவினரான அஜித்தும்(28) அவருடன் சென்றிருந்தார். அங்கு, கௌசல்யாவுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், லால்குடி அரசு மருத்துவமனைக்கு கெளசல்யாவை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, புள்ளம்பாடியை அடுத்த வரகுப்பை பகுதியை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மகேந்திரன் (31), கௌசல்யாவை ஆம்புலன்சில் ஏற்றி செல்ல ஆயத்தமானார். அப்போது, ஆம்புலன்ஸ் டிரைவர் மகேந்திரன் மற்றும் டெக்னீசியன் ஆகியோரை மதுபோதையில் இருந்த அஜித் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், அஜித் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்