Rock Fort Times
Online News

திருச்சி, எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானை உயிரிழந்ததாக பரவும் தகவல்- சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை !

திருச்சி மாவட்ட வன சரகத்திற்கு உட்பட்ட எம்.ஆர் பாளையம் காப்பு காட்டில் 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இங்கு 10 யானைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெய்னி என்ற யானை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. இந்நிலையில் மேலும் ஒரு யானை உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது தவறான தகவல் என்றும், இதுபோன்ற தவவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருச்சி மாவட்ட வன அலுவலரான கிருத்திகா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., திருச்சி மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட, எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. யானைகள் குறித்து தவறான தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்தத் தகவல் உண்மையான செய்தி அல்ல. தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரித்துள்ளார்.

          ADVERTISEMENT…👇

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்