தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் தநாபெக்ஸ் – 2025 எனப்படும் மாநில அளவிலான தபால் தலை கண்காட்சி, சென்னையில் 29-ந் தேதி முதல் நாளை (1-ந்தேதி) வரை நடைபெறுகிறது, இக்கண்காட்சியை தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் 2023ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்கு பொரிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் தலைமை அதிகாரி மரியம்மா தாமஸ் இவை வெளியிட மணப்பாறை முறுக்கு தயாரிப்பாளர் மற்றும் விற்பனை சங்கத்தின் பிரதிநிதி எம் கே முத்துப்பாண்டி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வை கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி காணொளி வடிவில் மணப்பாறை அஞ்சல் அலுவலகத்தில் காட்சிப்படுத்தினார்.
Comments are closed.