திருச்சி,திருவெறும்பூர் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் கைது! மற்றொருவருக்கு போலீசார் வலை
திருச்சி,திருவெறும்பூர் அருகே பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 2 பேர் சுற்றித்திரிந்துள்ளனர். அதில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவனை தேடி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை அய்யம்பட்டி பகுதியில் இரண்டு வாலிபர்கள் பட்டாகத்தியுடன் சுற்றி திரிவதுடன், ஆபாச வார்த்தைகளால் திட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொட்டிருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு துவாக்குடி போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் இருவரும் தப்பியோட முயன்றனர். அவர்களில் துவாக்குடி வடக்கு மலை பாரதிதாசன் தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் தமிழ் (எ) தமிழ்ச்செல்வன் (21) என்பவரை துவாக்குடி போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மற்றொருவனை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments are closed.