திருச்சி, கே.கே.நகர் எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி லீலாவதி (75). இவர் தனியாக வசித்து வருகிறார். ஜனவரி 4-ந் தேதி தனது உறவினர் வீட்டுக்கு சென்ற அவர், அடுத்தநாள் காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 13.5 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.மேலும், வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.