திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் இன்று அமலாக்க துறையினர் ரைடு நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள இவரது வீட்டில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்போடு 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது வேலூரில் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்திலிருந்து 11 கோடி ரூபாய் பணத்தை வருமானவரித்துறை பறிமுதல் செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தற்போது அந்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments are closed.