லால்குடி அருகே பட்டப்பகலில் டீக்கடையை அடித்து நொறுக்கிய அதிமுக நிர்வாகி அருண் நேருவின் சகோதரர்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் மருதராஜ். இவர், அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல அவர் டீக்கடையை நடத்திக் கொண்டிருந்தபோது அதிமுக இளைஞர்- இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் அருண் நேருவின் சகோதரர் வீ.டி.எம். அருண்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் டீக்கடையை ஆயுதங்களால் அடித்து நொறுக்கினர் . கீழஅன்பில் ஊராட்சி மன்ற தலைவர் சுதாவின் கணவர் சித்திரைசேனன் நேற்று முன்தினம் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் அருண் நேருவை சந்தித்தபோது, முன்விரோதத்தில் சித்திரைசேனனை அருண் நேரு அடித்துள்ளார். இதனால், ஜங்கம்மாராஜபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், அருண் நேருவை அடித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை சித்திரைசேனனுக்கு ஆதரவாக இருப்பதாக டீக்கடை நடத்தி வரும் ஆனந்த் மருதராஜ் கடையை பயங்கர ஆயுதங்களால் கடையை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் லால்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.