Rock Fort Times
Online News

கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்: திமுக அரசை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் கைது…!

அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் மாணவி உட்பட பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலியவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று(30-12-2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல், அவைத் தலைவர் ஐயப்பன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜாக்குலின், வனிதா, பத்மநாதன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் இன்ஜினியர் இப்ராம் ஷா, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கோ.கு. அம்பிகாபதி, அணிச் செயலாளர்கள் பாலாஜி, கலிலுல் ரகுமான், ஞானசேகர், ஜோசப் ஜெரால்டு, ஏடிபி ராஜேந்திரன், ஜான் எட்வர்டு, அப்பாஸ், இலியாஸ், சகாபுதீன், ஐ.டி பிரிவு வெங்கட்பிரபு, பகுதி செயலாளர்கள் எம்ஆர்ஆர் முஸ்தபா, என்.எஸ். பூபதி, சுரேஷ்குப்தா, ரோஜர், கலைவாணன், அன்பழகன், ஏர்போர்ட் விஜி, வெல்லமண்டி சண்முகம், நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன், வெல்லமண்டி பெருமாள், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன் மற்றும் வக்கீல்கள் சுரேஷ்,சேது மாதவன், சுரேஷ், கங்கைமணி, தினேஷ்பாபு, கௌசல்யா, முன்னாள் கோட்டத் தலைவர்கள் ஞானசேகர், கல்லுக்குழி மனோகரன், இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ்குமார், நிர்வாகிகள் ரஜினிகாந்த், அப்பாகுட்டி, டிபன் கடை கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டிபுதூர் வசந்தகுமார், என்ஜினியர் ரமேஷ், சிங்கமுத்து, காசிபாளையம் சுரேஷ்குமார், கே.பி.ராமநாதன், ஜெயக்குமார், அரப்ஷா, குருமூர்த்தி, உறையூர் சாதிக், அக்பர் அலி, எனர்ஜி அப்துல் ரகுமான், கே.கே.நகர் சதீஷ், கருமண்டபம் சுரேந்தர், இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், ஆதவன், ஆசைத்தம்பி, உறந்தை மணிமொழியன், ராஜாளி சேகர், முருகானந்தம், வண்ணாரபேட்டை ராஜன், வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், ஷாஜகான், உடையான்பட்டி செல்வம், ரமணிலால், ஈஸ்வரன், ஜெயகுமார், டைமண்ட் தாமோதரன்,ஐ.டி பிரிவு நாகராஜ், எடத்தெரு பாபு, கே.டி.அன்புரோஸ், கே.டி.ஏ. ஆனந்தராஜ், ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், குருமூர்த்தி, ஆரி, ஜெபா, பொம்மாசி பாலமுத்து, ஜெகதீசன், சிந்தை ராமச்சந்திரன், என். பி.வெங்கடாசலம், பொன். அகிலாண்டம், தர்கா காஜா, வெஸ்லி, கட்பீஸ் ரமேஷ், கயிலைகோபி, செல்லப்பன்,என்.டி மலையப்பன், கல்லுக்குழி முருகன்,உறந்தை முத்தையா, கே.சி.பி ஆனந்த் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்காததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றி அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்