மண்ணச்சநல்லூர் அருகே டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் கொள்ளை…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் முகமது அன்சார் – ஃபர்கத்நிஷா தம்பதியினர். முகமது அன்சார் சொந்தமாக பேருந்து வைத்து டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தம்பதி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்று இருந்தனர். பின்னர், அங்கிருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகைகள் மற்றும் 7 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், மோப்பநாய் காவிரி மூலமும் துப்பு துவக்கப்பட்டது. பூட்டப்பட்டிருந்த வீட்டை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.