திருச்சி மாவட்டம், எட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் . இவரது இளைய மகள் கிரிஜா (19), பிளஸ் -1 படித்துக்கொண்டிருக்கும் இவர் நேற்றிரவு ( டிச.24 ) வீட்டின் அருகேயுள்ள மின்கம்பத்தின் எர்த் கம்பியை பிடித்துக் கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அருகிலிருந்த மரத்தின் கிளை மின்கம்பத்தில் உரசியதில் எர்த் கம்பி வழியாக கிரிஜா மீது மின்சாரம் பாய்த்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவியின் தந்தை வடிவேல் அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Comments are closed.