மதுரை மாவட்டம், திடீர் நகரைச் சேர்ந்தவர் வட்ட சூரியா (வயது 27). இவர், திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியில் ஒரு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மத்திய சிறையில் அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். அப்போது வட்ட சூர்யாவிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவருக்கு கஞ்சா எப்படி கிடைத்தது? என்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து வட்ட சூரியாவிடம் விசாரணை நடத்திய போது அவர், சிறை வார்டன் ஒருவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கியதாக கூறினார். இதை யடுத்து போலீசார் சூர்யாவிற்கு கஞ்சா விநியோகம் செய்த சிறை வார்டன் எழில்ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மத்திய சிறையில் இருக்கும் கைதிக்கு சிறைவார்டன் ஒருவரே கஞ்சா விநியோகம் செய்த சம்பவம் திருச்சி சிறை காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.