Rock Fort Times
Online News

திருச்சி மாநகர பகுதிகளில் நாளை ( டிச.21 ) பவர் கட் !

திருச்சி கம்பரசம்பேட்டை, மெயின் கார்டு கேட் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை ( டிசம்பர் 21 ) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது., திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையம், கலெக்டர் ஆபீஸ்,ராஜா காலனி, பெரிய மிளகு பாறை, மேலப்புதூர், குட் செட் உறையூர், ராமலிங்க நகர், சண்முகா நகர்,உய்யக் கொண்டான் திருமலை, வெக்காளியம்மன் கோயில், கருமண்டபம், ராம்ஜி நகர், குறத் தெரு,லிங்க நகர், சீரா தோப்பு, முருங்கைப்பேட்டை, முத்தரசநல்லூர், அரியமங்கலம், பணியகுறிச்சி, வேங்கூர், திருவானைக்கோவில், அம்மா மண்டபம், பெரிய கடை வீதி, பழைய கரூர் ரோடு, சிந்தாமணி, சிங்காரத்தோப்பு, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்