Rock Fort Times
Online News

திருச்சியில் புத்தகக் கடையை உடைத்து பணம் திருட்டு: கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கிய 3 சிறுவர்கள்…!

திருச்சி மேலப் புலிவார்டுரோடு தமிழ்ச் சங்கம் கட்டிடத்தில் புத்தக கடைகள் உள்ளன. இதில், தியாகராஜன் என்பவர் ஸ்டேஷனரி மற்றும் புத்தகக் கடை வைத்துள்ளார். இவர் கடையை பூட்டிவிட்டு சம்பவத்தன்று வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த பத்தாயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது 3 சிறுவர்கள் கடையை உடைத்து திருடியது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்