Rock Fort Times
Online News

ஆன்லைன் அபராதத்தை கைவிட கோரி திருச்சியில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!

ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். டோல்கேட் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அடிப்படையில் அக்ரிகேட்டர் விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். பி.என். எஸ்106 (1), 106 (2) -ன் படி மரண விபத்திற்கு 5 ஆண்டு, 10 ஆண்டு தண்டனை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கால்டாக்சி, ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். விபத்து வழக்கில் ஓட்டுனருக்கு சொந்த ஜாமின் வழங்க வேண்டும். நெடுஞ்சாலை, விமான நிலையங்களில் ஓட்டுநர்களுக்கு பார்க்கிங், ஓய்வு அறை வசதி செய்து தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகர் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று( 10 -12- 2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன், சங்க மாவட்ட செயலாளர் சந்திரன், மாவட்ட பொருளாளர் அந்தோணிசுரேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் பீர்முகமது, சுப்பிரமணி, மாவட்ட துணை தலைவர்கள் வருசைமுகமது, ஜோசப், ராஜ்குமார் ஆகியோர் பேசினர்.இது சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்