திருச்சி, திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.மாரி(எ)பத்மநாபன் தலைமையில் நிர்வாகிகள் இன்று(09-12-2024) திருச்சி திருவானைக்காவலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து அடிமனை உரிமையாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த பத்மநாதன் கூறுகையில், திருவானைக்காவல் பகுதி அடிமனை பிரச்சனை குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், 18-03-2024 அன்றைய தினம் பிறப்பித்த உத்தரவின்பேரில் இதுநாள்வரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. ஆகையால், மீண்டும் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். இதுதொடர்பாக வருகிற 20-ந் தேதி அன்று வாருங்கள் என்று வாய்மொழி உத்தரவு அளித்துள்ளார் என்றார். மனு அளிக்கும்போது கூட்டமைப்பின் செயலாளர் சந்தோஷ், ஆலோசனை தலைவர் கலைமணி மற்றும் கவுன்சிலர் அப்பீஸ் முத்துக்குமார், பிரஸ்.வெங்கடேசன்,பாஸ்கர், ஞானமூர்த்தி, ராதாகிருஷ்ணன், தேவி, ராஜா, ஜெமினி, ரவி, முருகானந்தம், கண்ணன் மற்றும் அடிமனை உரிமையாளர்கள் உடன் இருந்தனர்.
Comments are closed.