திருச்சி, எடமலைப்பட்டிபுதூர், ஏ.கே.எம்.மஹால் குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 29). இவர் தில்லைநகரில் உள்ள ஒரு ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், ஹேமப்பிரியா (25) என்பவருக்கும் கடந்த 15 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சரத்குமார் ரூ.4 லட்சம் லோன் வாங்கி இருந்ததாகவும், இதுதொடர்பாக மனைவி கேட்டபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு ஹேமப்பிரியா சென்று விட்டார். இதனால், மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட சரத்குமார், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஹேமப்பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, சரத்குமார் கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.