திமுகவை வீழ்த்த வேண்டுமானால் சீமான் உள்ளிட்ட அனைவரும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும்- திருச்சியில் நடிகை கஸ்தூரி பேட்டி…!
இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கு திருச்சி, ஸ்ரீரங்கத்தில் இன்று(08-12-2024) நடைபெற்றது. இதில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், நவம்பர் 3-ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நான் பேசாத விஷயம்தான் மிகப்பெரிய செய்தியானது. பிராமணர்கள் ஏதாவது குரல் கொடுத்தால் அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதும், அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதும் நடக்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்தோம். 2026ல் திமுக கூட்டணி மைனஸில் செல்லும் என விஜய் கூறியுள்ளார். அப்படி நடந்தால் விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாம். நீண்ட நாட்களாக திமுகவுடன், விசிக இருக்கிறது. திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியே வர வாய்ப்பில்லை. சினிமா செய்திகளை பார்க்கவில்லை என உதயநிதி கூறியுள்ளார். அவர் இவ்வாறு பேசுவது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே உதயநிதி சனாதனம் குறித்து பேசி உள்ளார். ரஜினி குறித்தும் தரக்குறைவாக பேசியுள்ளார். தற்பொழுது விஜய், ஆதவ் அர்ஜுன் குறித்தும் பேசி உள்ளார். திமுக வை வீழ்த்த வேண்டுமானால் சீமான் உள்ளிட்டோர் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
Comments are closed.