ரோட்டரி விழாவில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!
பன்னாட்டு ரோட்டரி என்பது சமூக சேவையை நோக்கமாகக் கொண்ட சர்வதேச அமைப்பாகும். இந்தியாவில், ரோட்டரி இன்டர்நேஷனல் ஒரு பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் திருச்சியை சேர்ந்த எக்ஸெல் குழும நிறுவனங்களின் தலைவர் எம்.எம்.எம்.என்று அழைக்கப்படும் எம்.முருகானந்தம் 2025- 27 பன்னாட்டு ரோட்டரி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் லீட் 2025 – ரோட்டரி இந்தியா லீடர்ஷிப் கான்க்ளேவ் ( RILC) வருகிற 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கி 24ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை எக்ஸெல் குழும நிறுவனங்களின் தலைவரும், ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனருமான எம்.முருகானந்தம் சந்தித்து அழைப்பு விடுத்தார். இதுகுறித்து ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் கூறுகையில், RILC என்பது இந்தியா முழுவதிலும் உள்ள Rtns, வணிக நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் Rtrs ஆகியோரை ஒன்றிணைக்கும் முதல் வகையான நிகழ்வாகும். இந்த விழாவினை தொடங்கி வைத்து சிறப்பித்து தருமாறு தமிழ்நாடு துணை முதல்வர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள், தமிழகத்தில் கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கு ஆதரவாக ரோட்டரி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த கூட்டாண்மை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.
Comments are closed.