விழுப்புரம், ஈரோடு பயணிகள் ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நிர்வாக காரணங்களால், விழுப்புரத்திலிருந்து காலை 5.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரயில் (06891) அக்டோபர் 28-ம்தேதி முதல் திருச்சிக்கு 9 மணிக்குப் பதிலாக 9.25 மணிக்கு வந்தடையும். திருச்சியிலிருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் திருச்சி -ஈரோடு பயணிகள் ரயில் (06611) அக்டோபர் 28-ம் தேதி முதல் காலை 7.20 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.