திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை ! கணக்கில் வராத ரூ.97 ஆயிரம் பறிமுதல் ! ( வீடியோ இணைப்பு )
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்சம், பரிசுப் பொருட்கள் வாங்குவதை கண்காணிப்பதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத 69 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இன்று திருச்சி கன்ட்டோண்மென்ட் பகுதியில் செயல்படும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் ஜெகதீஷ் காரில் ரூ.90 ஆயிரம் பணம் இருந்துள்ளது. இதனைக் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத் துறையினர், தொடர்ந்து அலுவலகத்தில் 7000 ரூபாய் பணம் இருந்துள்ளது அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணையும் அலுவலகத்தில் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.