Rock Fort Times
Online News

மாமியாரை குத்தி கொலை செய்த மருமகள்! திருச்சி அரியமங்கலத்தில் பகீர்!

திருச்சி,திருவெறும்பூர் அருகே மனநலம் பாதித்த மருமகள், மாமியாரை குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது   திருச்சி,திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் காமராஜர் நகர் பீடி காலனியை சேர்ந்தவர் அக்பர் அலி.இவரது மனைவி சம்சத் பேகம்(55).அக்பர் அலி ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு சிராஜ் என்ற மகனும், நிஷா என்ற மகளும் உள்ளனர்.  இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.இந்த நிலையில் சிராஜ் கவரிங் நகை செய்யும் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் ஆயிஷா பேகம் ( 22 ) என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.  இந்நிலையில் ஆயிஷா பேகம் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், இதற்காக மனநல ஆலோசகரிடம் ட்ரீட்மென்ட் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆயிஷா பேகம் சில நேரங்களில் என்ன செய்கிறோம் என்பதை தெரியாமல் செய்து விடுவார் என்றும், ஏற்கனவே சம்சத்தை தலையணை முகத்தில வைத்து அழுத்தியும், கழுத்தை நெறித்தும் கொலை செய்ய முயன்றுள்ளதாககூறப்படுகிறது

மாமியார்,மருமகள் இருவரும் கீரனூரில் உள்ள தர்காவிற்கு சென்று கயிறு கட்டி வந்துள்ளார்கள். இன்று காலை வீட்டில் இருந்த பொழுது சம்சத்தை காய் நருக்கும் 2 கக்திகளால் இடுப்பு மற்றும் நெஞ்சு பகுதியில் ஆயிஷா பேகம் குத்தி உள்ளார்.  இதில் சம்பவ இடத்திலேயே சம்சத் பேகம் பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்நிலையில் ஆயிஷா பேகத்திற்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது  அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்  இது குறித்து தகவலறிந்த அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்சத் பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்