Rock Fort Times
Online News

ராகுல் காந்தி விவகாரம் திருச்சியில் காங்கிரஸ் தெருமுனை பிரச்சாரம்!

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய பாஜக மோடி அரசு செய்து வரும் அநீதியை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் ,பெருமை பிரச்சாரம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் எம். சரவணன் தலைமைவகித்தார். திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் செந்தில்நாதன், சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மோகனாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவரங்கம் கோட்ட தலைவர் சிவாஜி சண்முகம் சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் மலைக்கோட்டை முரளி, மாவட்ட துணை தலைவர் கள்ளத்தெரு குமார், மாவட்ட செயலாளர் ஜி.எம்.ஜி.மகேந்திரன், ஜெகதீஸ்வரி, அப்துல் குத்தூஸ், சோசியல் மீடியா மாநில தலைவர் அபுதாஹீர், தேசியத் தலைவர் அப்துல் ரஹீம் ,கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், திருச்சி கிழக்கு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது ரபி, மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேஷ் காந்தி, சொக்கலிங்கம், மகளிர் அணி அஞ்சு, கலைப்பிரிவு ராஜீவ் காந்தி, வார்டு தலைவர்கள் வெல்ல மண்டி பாலசுப்ரமணியன், திம்மை செந்தில் குமார், பாலக்கரை மாரியப்பன். கலை பிரிவு ராஜீவ் காந்தி, நாகமங்கலம் சீனிவாசன், கலை பிரிவு சண்முகம், பொறியாளர் பிரிவு தலைவர் சுதர்சன், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் கிருபாகரன், வனஜா, சுப்பிரமணியன், கௌசி, சலீம். நிர்மல் குமார், கோகுல்நாத், பிரஸ் பாபு, ஸ்ரீரங்கம் முருகன், புவன் கண்ணா சரவணன், தேவா, கவி, சிந்தை வினோத், அருண் விஜய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்