Rock Fort Times
Online News

உண்ட வீட்டுக்கே குந்தகம் – திருச்சி, கே.கே.நகரில் 20 பவுன் நகையை திருடிய வேலைக்கார பெண்!

திருச்சி, கே.கே நகர் ஐயப்பா நகர், நேரு தெரு பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேலு.இவர் தனது தாயாரை பராமரிக்க விழுப்புரம் மாவட்டம் கோரைவள்ளி கிராமத்தைச் சேர்ந்த குமாரி என்பவரை நியமித்துள்ளார் . அதன்படி அப்பெண்மணி ஐயப்பா நகரில் உள்ள குழந்தைவேலு வீட்டில் தங்கி அவரது தாயாரை கவனித்து வந்தார். தாயாரும் வீட்டு வேலைக்கார பெண்மணியும் தரைத்தளத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று ( செப்.27 ) மதியம் 1.30 மணி அளவில் மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து 20 பவுன் நகையை திருடி சென்று விட்டதாக குமாரி தெரிவித்தார்.  இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைவேலு, உடனடியாக கே.கே நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டு வேலைக்கார பெண்மணி குமாரியை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் நகை திருடி விட்டு நாடகம் ஆடியது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 20 பவுன் நகையை மீட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்