Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 53 லட்சம் கடத்தல் தங்கம் நகைகள் பறிமுதல்: பெண் பயணியிடம் தீவிர விசாரணை…!

மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அவ்வாறு ஒரு பெண் பயணியின் உடைமையை சோதனை செய்தபோது அதில் 2.29 கிலோ எடை கொண்ட வளையல், மோதிரம், செயின் உள்ளிட்ட பல்வேறு வகையான தங்க நகைகள் இருந்தது.
அந்த நகைகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்திய போது, அவரிடம் அந்த நகைகளுக்குரிய எவ்வித ஆவணமும் இல்லை. அதன் பேரில், அந்த கடத்தல் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  அவற்றின் இந்திய மதிப்பு  ரூ.1 கோடியே 53 லட்சம் ஆகும். அந்த பெண் பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்