மதுரை மாவட்டம், மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடி உள்ளது. இதன் அருகே இன்று(05-08-2024) சரக்கு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார், அந்த சரக்கு லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்,
விபத்து குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தது மதிமுக தொண்டர் அணி அமைப்பாளர் பச்சமுத்து மற்றும் அமல்ராஜ், புலிசேகர் என்பதும், சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மதுரை திரும்பும் போது விபத்தில் சிக்கிக் கொண்டது தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.