Rock Fort Times
Online News

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள காவல் உதவி மையம் முழு நேரமும் செயல்பட கோரி மனு…!

திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி
29-வது வார்டுக்கு உட்பட்ட 45- வது பீட் (ரோந்து) காவல் உதவி மையம் பகுதி நேரமாக செயல்படுகிறது. இதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆழ்வார் தோப்பு பகுதியில் இரவு நேரங்களில் குடித்து விட்டு குடிபோதையில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றனர். ஆகவே, இந்த காவல் உதவி மையத்தை முழு நேர காவல் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்