Rock Fort Times
Online News

திருச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளிடையே கையெழுத்துப் போட்டி…!

வெற்றி பெற்றவர்களுக்கு வக்கீல் வெங்கட் பரிசு வழங்கினார்

குடியரசு தின விழா கொண்டாட்டமாக துளசி பார்மசிஸ் திருச்சி கிளைகள் நடத்திய மாபெரும் 16ம் ஆண்டு கையெழுத்துப் போட்டியானது, திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்டத்திலிருந்து 60க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வருகை தந்து பங்கேற்றனர். போட்டிக்கு துளசி பார்மசி நிர்வாக இயக்குனர்கள் ராமகிருஷ்ணன், ராதா கிருஷ்ணன், பசுபதி, சீதாராம கிருஷ்ணன், பத்மாவதி ராஜேந்திரன், அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளரும் , திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளருமான வக்கீல் பி.வி வெங்கட் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்