உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2002 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை , தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவி பறிபோனது. அவர் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்தார். வரும் 22ஆம் தேதி வரை விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய பொன்முடி, அவரின் மனைவிக்கு அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணையில் சொத்துகுவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.