Rock Fort Times
Online News

கொள்ளிடம் ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலம் மீட்பு…

யாா் அவா் ? போலீசார் விசாரணை...

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்து வந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து லால்குடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.அதன்பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் இறங்கி சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா?, அல்லது ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா ? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்