திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சரும்மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில், சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி இ.பி. ரோட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், பி.எம்.சபியுல்லா முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், கட்சியின் நிர்வாகிகள் கோவிந்தராஜ், செங்குட்டுவன், மூக்கன், நூர்கான், சந்திரமோகன், சரோஜினி, பகுதி கழக செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், பாபு, மோகன், ராஜ்முகமது, மணிவேல், சிவக்குமார், அன்பழகன், மற்றொரு சிவக்குமார் மற்றும் மாவட்ட, மாநகர, நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், துணை அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.