Rock Fort Times
Online News

அமமுக சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் அவைத்தலைவர் சாத்தனூர் எம்.எஸ்.ராமலிங்கம் தலைமையில், மாநகர் மாவட்ட செயலாளரும், 47-வது வார்டு கவுன்சிலருமான ப.செந்தில்நாதன் முன்னிலையில் திருச்சி தென்னூர் அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை செயலாளர்கள் தனசிங், ஹேமலதா, ஒன்றிய செயலாளர் சண்முகம், பாசறை செயலாளர் ஜான் கென்னடி, பகுதி செயலாளர் வேதாத்ரி நகர் பாலு, சதீஷ், மதியழகன், பன்னீர், நிர்வாகிகள் பெஸ்ட் பாபு, நாகநாதர் சிவகுமார், தருண், நாகூர் மீரான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்