இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கேதா மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
“கல்மேகசாவ்- அசாவா அரிஷ்டா” என்ற பெயரில் உள்ள ஆயுர்வேத சிரப் ஒரு கடையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சிரப்பானது குறைந்தது 50 பேருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அதில் அதிக அளவிலான விஷத்தன்மை கொண்ட “மெத்தில் அல்கோஹால்” என்கிற வேதியியல் இருப்பதாக தெரிகிறது. இதை குடித்த கிராமவாசிக்கு ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், மெத்தில் ஆல்கோஹால் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேதா போலீஸ் கண்காணிப்பாளர் ராஜேஷ் காதியா தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2 நாட்களில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக கடைக்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.