Rock Fort Times
Online News

ஓடும் பேருந்தில் திடீர் நெஞ்சுவலி: 18 பயணிகளை காப்பாற்றி விட்டு உயிர் துறந்த அரசு டிரைவர்…

கள்ளக்குறிச்சி மாவட்டம், விருத்தாசலத்தில் இருந்து திருப்பதிக்கு 18 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை மாரிமுத்து என்பவர் ஓட்டினார். திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது டிரைவர் மாரிமுத்துவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பேருந்தில் உள்ள 18 பயணிகளை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையான நெஞ்சு வலியையும் பொறுத்துக் கொண்டு சாலையோரமாக பேருந்தை பத்திரமாக நிறுத்தினார்.
பின்னர் இருக்கையிலேயே சரிந்து விழுந்தார். அவரை கண்டக்டர் மற்றும் சக பயணிகள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். 18 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி விட்டு டிரைவர் உயிரிழந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்