திருச்சி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு சொகுசு பேருந்து…
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்...
பெங்களூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு சொகுசு பேருந்து ஒன்று 36 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு புறப்பட்டது. பேருந்தை சேலத்தை சேர்ந்த பூபதி ஓட்டினார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெ.2 கரியமாணிக்கத்தில் உள்ள திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் அந்த பேருந்து வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்து ஓட்டுனர் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது மற்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை மீட்டனர். காயமடைந்த ஓட்டுனர் உட்பட 3 பேரையும் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.