Rock Fort Times
Online News

துறையூர் அருகே சமூக ஆர்வலரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவருக்கு வலைவீச்சு….

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அருகே உள்ள கொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் சதீஷ்குமார் ( வயது 36). சமூக ஆர்வலரான இவர் தேசிய நீதி கட்சி மாநில அமைப்பு செயலாளராகவும் உள்ளார். கொப்பம்பட்டி ஊராட்சியில் குடிநீர் பிரச்சனை, தெரு விளக்கு, சாலை வசதி, 100 நாள் வேலையில் முறைகேடு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் குறித்து பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளூர் போலீசில் அனுமதி கேட்டிருந்தார். போலீசார் அனுமதி மறுத்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில்
20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்றிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (19ம் தேதி) மாலை கொப்பம்பட்டியில் உள்ள சந்தை அருகே ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்து துண்டு பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பஞ்சாயத்து தலைவர் மனோகரனின் ஆதரவாளர்கள் சிலர் சதீஷ்குமாரிடம் வாக்குவாதம் செய்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சதீஷ்குமார், துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், ராஜேந்திரன், நேரு, பூபதி, முருகன், வெங்கடேசன், முரளி, கோபி, நல்லதம்பி மற்றும் சிலர் மீது உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்