உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கமான பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்
தேமுதிக தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக கூறப்படும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான தகவல். இதுபோன்ற வதந்திகளை நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்’ என்று அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Next Post
Comments are closed, but trackbacks and pingbacks are open.