உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் உமேஷ் குமார்( வயது 32). இவர் திருச்சி ஜாபர்ஷா தெருவில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர், ஹோட்டலின் மேல் மாடியில் தங்கி இருந்தார். நேற்று இரவு வேலைகளை முடித்துக் கொண்டு மாடியில் தூங்க சென்றவர் இன்று(29-10-2023) மீண்டும் வேலைக்கு வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு உமேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது. இதுகுறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உமேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் உமேஷ்குமார் , காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.