Rock Fort Times
Online News

திருச்சியில் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து- ரவுடி கைது …

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் ரவிக்குமார் (வயது 28). வழக்கறிஞா் . சம்பவத்தன்று இவர் குட்செட் பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை மர்ம நபர் ஒருவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுக்கவே ரவிக்குமாரின் இடது உள்ளங்கையில் கத்தியால் குத்தி விட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசில் ரவிக்குமார் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கறிஞரை கத்தியால் குத்தியதாக பாலக்கரை முதலியார்சத்திரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவரை கைது செய்தனர். மணிகண்டன் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்