சா்வதேச மகளிா் தினத்தையொட்டி பெண் பைலட்டுகளால் இலங்கையிலிருந்து திருச்சிக்கு விமானம் இயக்கப்பட்டது. இதில் ஊழியா்கள் உள்பட 8 போ் பயணித்தனா். திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு சுமாா் 35 ஆண்டுகளாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த சேவை நாளொன்றிற்க்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இரண்டு சேவைகளாக மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமான நிறுவனம் நேற்று மகளிா் தினத்தை முன்னிட்டு இலங்கை தலைநகா் கொழும்புவிலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட விமான சேவை முழுவதும் பெண்களால் இயக்கப்பட்டது. ஊழியா்கள் உள்பட மொத்தம் 8 போ் இந்த விமானத்தில் பயணம் செய்தனா். மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் இந்த விமான சேவையானது நேற்று ஒரு நாள் மட்டும் பெண்களால் இயக்கப்பட்டது.