திருச்சி காந்தி நகர் எம்.ஜி.ஆர்.தெருவை சேர்ந்தவர் சின்னையா. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 47 ). இவர், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமனிடம் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், நான் மற்றும் எனது பகுதியைச் சேர்ந்த 35 பேர் அதே பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் பேகம், நிலோபர், பாபர் அலி, மஸ்ஜித் ஆகியோரிடம் ஏலச்சீட்டில் சேர்ந்து இருந்தோம். சீட்டு காலம் முதிர்வடைந்தும் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். வீட்டை காலி செய்யவும் முயன்றனர். அப்போது நாங்கள் அவர்களிடம், சீட்டு பணத்தை தருமாறு கேட்டதற்கு எங்களை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், பணம் தர முடியாது என்று மறுத்தனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. அந்த புகாரின்பேரில், மும்தாஜ்பேகம் உள்பட 4 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.