Rock Fort Times
Online News

திருச்சி: லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த் தலையை சேர்ந்தவர் மூர்த்தி மளிகை கடை நடத்தி வந்த இவர் இன்று ஸ்ரீரங்கம் சிங்கபெருமாள் கோவிலில் தனது 9 வயது மகள் தர்ஷினி மற்றும் 7 வயது மகன் குருச்சரண் ஆகியோருடன் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு 7 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அல்லூர் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனத்தை முந்த முயன்றபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடல்களை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லாரி ஓட்டுனரான உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த உமாசங்கர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் பலியான சம்பவம் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்