கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை காஞ்சிபுரத்தில் இன்று ( 15.09.2023 ) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதேபோல, அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் 2000 பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டத்திற்கான ஆணையினை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் , மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், திருச்சி சரக டி.ஐ.ஜி. பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி , சட்டமன்ற உறுப்பினர்கள் மண்ணச்சநல்லூர் கதிரவன், துறையூர் ஸ்டாலின்குமார், மணப்பாறை அப்துல்சமது , காடுவெட்டி தியாகராஜன் , லால்குடி சௌந்தரபாண்டியன் , திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஆண்டாள் ராம்குமார், ஜெய நிர்மலா,பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், காஜாமலை விஜய், நாகராஜ், கமால் முஸ்தபா, முன்னாள் பகுதி செயலாளர் தில்லைநகர் கண்ணன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் புத்தூர் தர்மராஜ், கிராப்பட்டி செல்வம் , வர்த்தக அணி துணை அமைப்பாளர் தொழிலதிபர் ஜான்சன்குமார், துபேல் அகமது பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.