Rock Fort Times
Online News

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது…!

திருச்சி அரியமங்கலம் பகுதியில் அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரியமங்கலம் காமராஜ் நகர் சவுகத் அலி தெருவை சேர்ந்த சாகுல்ஹமீது மகன் அசார் என்கிற அசார் முகமது (வயது 23), திருச்சி காந்தி மார்க்கெட் காமராஜர் நகரை சேர்ந்த ரத்தினம் மகன் வசந்த் (19), திருச்சி இ.பி ரோடு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சை சச்சின் (22)ஆகிய 3 பேரும் அந்த பகுதியில் போதை மாத்திரை விற்ற போது போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் ரூ.4,500 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து திருச்சி 6 வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைதான சஞ்சை சச்சின் மீது ஏற்கனவே கொலை வழக்கும், வசந்த் மீது திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்