கோவை இருங்கர் ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52). இவர் திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மாலதி. இவர், கோவையில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த செந்தில்குமார், மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். பின்னர் தனது மகளுக்கு போன் செய்து, தான் திருச்சியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் விஷம் குடித்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் திருச்சிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரை மீட்டு திருச்சி மருத்துவமனையில் சேர்த்தனர் .ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மாலதி கொடுத்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் வழக்கு பதிந்து, செந்தில் குமார் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.