திருச்சி கே.கே.நகர் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி கவிதா (48). இவர் திருச்சி ரயில்வே மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர், திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் இருந்து சேலம் புதிய பஸ் நிலையம் செல்வதற்காக பஸ் ஏற நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தனியார் பஸ்ஸில் ஏற முயன்ற போது அவரது ஹேண்ட் பேக்கில் இருந்த 9 பவுன் நகைகளை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் யாரோ தங்க நகைகளை “அபேஸ்” செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கவிதா புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிரேசி தமிழ்ச்செல்வி வழக்கு பதிந்து நகைகளை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்.
Comments are closed.